என்றும் நீ
என் நெஞ்சக் குழியில் நீ
பார்க்கும் விழியில் நீ
பேசும் மொழியில் நீ
கனவில் நீ
நினைவில் நீ
என்றென்றும் நீ
எண்ணமெல்லாம் நீ
என்னுடன் நீ
உன்னுடன் நான்
என்றிருந்தோம் நாம் - இன்று
எங்கோ நான்
எங்கோ நீ
ஏன் இணைந்தோம்
ஏன் பிரிந்தோம்
விடை யாருக்கும் தெரியவில்லை
என் மனம் எனும்
சுவாசப் பையில் மாறமல்
மணம் விசும் மலர் செண்டே
நான் மரிக்கும் வரை
இந்த மலரின் இதழ்கள்
ஈரமாகவே இருக்கும்
காரணம் அது இருப்பது
என் இதயத்தில்
நான் எங்கிருந்த போதிலும்
உன் நினைவு மலர்களால்
என் இதயம்
மணத்துக் கொண்டே இருக்கும்
அது உன் நினைவுகள்
மாத்திரம் வைக்கும்
மணி மண்டபம்
RANJANA'S GARDEN
Tuesday, October 12, 2010
Monday, October 4, 2010
பிரிவு
உருகிப் போகிறேன்
உயிரே உனை விட்டு நான்
விலகிப் போகிறேன்
உன் உயிருக்குள் என்
உயிரை புதைத்து போகிறேன்
உயிரின்றி வெறும் உடலாக
திரும்பிப் போகிறேன்வெறும் உடலோடு உயிருக்காய்
காத்து நிற்கிறேன்
உனை நேசித்த காலங்களை
நினைவில் கொள்கிறேன்
அந்த நினைவுகளால்
நான் இன்று சுவாசிக்கின்றேன்
நெஞ்சுக்குள் ஒரு கவிதை வாசிக்கின்றேன்
அதை நேரில் உனக்கு சொல்ல
மிகவும் ஆசிக்கின்றேன்
பிரிவு எனும் பெருங்கடலில்
தத்தளிக்கிறேன்
சில நேரம் உன் நினைவு எனும்
படகினிலே பயணிக்கிறேன்
காலம் வரும் என்று நானும்
காத்திருக்கிறேன்
இப்போதெல்லாம் நான் உன்னை
கனவில் மட்டுமே
கை பிடிக்கிறேன்
தென்றலாய் நெஞ்சுக்கு
சுகமளிக்கிறாய்
தீயாய் சில நேரம்
சுட்டு வைக்கிறாய்
நீ இல்லாத நேரங்களிலும்
சிரிக்க வைக்கிறாய்
நீ இருந்தும் சில நேரம்
அழுக வைக்கிறாய்
உணர்வுகளால் பொம்மை போல
ஆட்டுவிக்கிறாய்
உன் நினைவுடனே நித்தம் என்னை
உறங்க வைக்கிறாய்
கனவில் கூட வந்து என்னை
கலகம் செய்கிறாய்
சொல்லி அனுப்பு
இனி தாங்காது
என் மனசோட தொண தொணப்பு
Subscribe to:
Posts (Atom)